யாழ் காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா

யாழ்ப்பாணம் – காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்து.

1973 ஆம் ஆண்டு பிறந்து 1989 இல் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய 50 வயதை பூர்த்தி செய்த பழைய மாணவர்களான பொன்னகவை அணியினரால் கல்லூரியில் கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமே இன்று திறக்கப்பட்டுள்ளது.

70 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வகுப்பறை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர் அ.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், முன்னாள் கல்லூரி அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதப்பிள்ளை உள்ளிட்ட சிலர் அதீதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையில் இலங்கை வங்கி மாணவர் சேமிப்புக் கிளையும் இன்று திறந்து வைக்கப்பட்டது

Recommended For You

About the Author: admin