பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

பளை – அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வு
இந்த சம்பவம் இன்று (05) அதிகாலையளவில் நடந்துள்ளது.

அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மண் ஏற்றிய நிலையில் உள்ள உழவு இயந்திரங்கள் வருகின்ற 07ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor