அமெரிக்காவில் மற்றுமொரு இந்திய மாணவன் மரணம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு மாத காலத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவன் இறந்தது இது நான்காவது சம்பவமாகும்.

ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டியில் உள்ள லிண்ட்னர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கல்வி கற்று வந்த இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் மரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், அவரது மரணத்தில் சதிகள் எதுவுமில்லை எனவும் நியூயோர்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ரெட்டியின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வருவதாகவும், முடிந்தவரை அவர்களுக்கு உதவுவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin