சுதந்திர தினத்தை முன்னிட்டு: நாளை 600 கைதிகள் விடுதலை

76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin