இளைஞர் மரணம்: பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த பிரேதச வாசிகள்

பொலிஸ் காவலில் இருந்த இளைஞரின் மரணத்தில் பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

22 வயதுடைய சந்தேக நபரான ஷனுக கிஹான் மரம்பகே, இரண்டு பெண் சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டார்.

சிறிது நேரத்தில் மரம்பகே சுகவீனமடைந்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், உயிரிழந்தவரின் உறவினர்கள் அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதனால், பிரதேச மக்களும் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 22 வயதான ஷனுக கிஹான் மரம்பகே, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் என்பதால் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin