யாழில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஏழரைப் பவுண் தங்கப் நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor