யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு சுட்டிக் காட்டப்பட்டது.

விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் இதன்போது மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin