வாடகைக்கு வீடு எடுத்து போதைபொருளை தொழிலாக முன்னெடுத்த பல்கலை மாணவன்

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று (22) பாரியளவிலான ஹசீஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் முருதலாவ பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து இது தொடர்பான வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கன்னோறுவ பிரதேசத்தில் ஹசீஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் உத்தியோகபூர்வ நாயான “லூகாஸ்” உதவியுடன் பல்கலைக்கழக மாணவர் தங்கியிருந்த குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் 15 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர். .

இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் இந்த மாணவனுடன் மேலும் இரு மாணவர்கள் அந்தந்த வீட்டில் தங்கியுள்ளனர்.

சோதனையின் போது அவர்கள் அறையில் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுக்கும் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டு தொகுதியை சேர்ந்தவர் எனவும், பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை எனவும் தெரியவருகின்றது

Recommended For You

About the Author: admin