பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கு எனக்கூறிய கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அவரின் விருப்பப்படியே பெரும்பாலானோர் கூல் சுரேஷை நாமினேட் செய்தனர். இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் அவர் இடம்பிடித்து உள்ளார்.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தால் அது வெளியேற்றப்படும் நபராக அவரும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர் இப்படி சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார்.

இதையடுத்து கூல் சுரேஷை கன்பெஷன் அறைக்கு அழைத்து அவரின் செயலை கண்டித்த பிக்பாஸ், அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ், இனி இதுபோன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு சென்றார். பிக்பாஸ் வரலாற்றில் இதற்கு முன் முதல் சீசனில் பரணி இதுபோன்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin