ஷீத்தலின் பிரிவு குறித்து மனம் திறந்த நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்

இவ்வாண்டு துவக்கத்தில் இணையத்தில் புயலை கிளப்பிய நடிகர் பப்லூ, ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் முதல் முறையாக பிரேக் அப் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் பப்லூ பிருத்வீராஜ்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லூ பிருத்வீராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார்.

தற்போது அவர், பல நல்ல படங்களில் நடித்து வருகின்றார். 57 வயதை கடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர் அவர். இந்நிலையில் இவ்வாண்டு துவக்கத்தில் நடிகர் பப்லூ, திடீரென தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார், காரணம் அவர் தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணுடன் Live in Relationship இல் இருந்தமையே காரணம்.

இவர் சென்னையில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருவது மட்டும் இன்றி, மலேசியாவிலும் பிஸ்னஸ் செய்து வருகிறார். தொழில் ரீதியாக இவர் அடிக்கடி மலேசியா சென்று வந்த போது ஷீத்தல் என்கிற பெண்ணுக்கும், இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஷீத்தலை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் ஹாட் ஜோடியாக இருந்த இருவரும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விட்டதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்கில் இருந்து தங்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றியுள்ளனர். அது போல ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெட்டிசன் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என்று கமெண்டில் கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கமெண்ட்டை லைக் செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பப்லு தொகுப்பாளினி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது “நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எனவே மக்களிடம் நான் பேச தயக்க மாட்டேன்.

வாழ்க்கை எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்று கொடுக்கிறது. எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்று. இதற்கு அப்பறமும் அதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் ஒரு முட்டாள்.

இனி நான் என்னுடை தொழில், அழகு, ஃபிட்னஸ் போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளேன். மக்கள் என்னை ரசிக்கும்படி வாழ உள்ளேன் என தெரிவித்துள்ளார்.பர்சனல் என்பது தனி, அது யாருக்கும் தேவையே இல்லாத ஒன்று.

இனி சிங்கிளாக தான் இருக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பிய போது.. நான் எப்போதுமே சிங்கிள் இல்லை. மூன்று அக்கா – தங்கைகளுடன் தான் பிறந்துள்ளேன். பெண்களுடன் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளேன்.எனக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர் என கூறியுள்ளார்.

ஷீத்தலுடனான ரிலேஷன் ஷிப்பில் பிரச்சனை என வெளியாகும் தகவல் குறித்து எழுப்பிய கேள்விக்கு… இது குறித்து என்னிடம் கேட்டீர்களா..? ஷீத்தலிடம் கேட்டீங்களா என மழுப்பியள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு உங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஷீத்தல் இருந்தார். இந்த பிறந்தநாளில் ஷீத்தல் இல்லாதது பற்றி கேட்டதற்கு, போனமுறை என் பிறந்தநாளுக்கு மட்டும் 11 லட்சம் செலவு செய்தேன்.

இந்த முறை திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் என்னால் எந்த கொண்டாட்டத்தையும் அனுபவிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். அதே போல் இயக்குனர் மிஷ்கினுடன் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக பர்சனல் வாழ்க்கையை பற்றி சொல்ல விரும்பவில்லை என இவர் கூறியுள்ளமை அவர்கள் பிரிவை பறைசாற்றுகின்றது என இணையதளவாசிகள் தங்களின் கருத்துக்களை பரப்பிவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor