பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்தி!

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கயைம, 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கலைப்பீடத்திற்கான மாணவ அனுமதி
இம்முறை கலைப்பீடத்திற்கு அதிகளவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கலைப்பீடத்திற்கான மாணவர்களின் எண்ணிக்கை 11,780 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor