நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞனுக்கு நிகழந்த சோகம்!

கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

குறித்த இனைஞன் வேலை வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை ஒன்றிற்கு சென்றுவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன், எகொடஉயன பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போனவரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor