மீண்டும் திறக்கப்பட இருக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமைத்துவ பீடம்!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் (04.11. 2023) ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை நேற்று (29.11.2023) விடுத்துள்ளார்.

உப வேந்தரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக 6 மாணவர்களுக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor