வட்டுகோட்டை சம்பவத்தில் கைதான பொலிசாருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய சித்தன்கேணி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதான நால்வரையும் நாளை மறுதினம் (27) திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor