கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இன்று (2023.11.24) கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் நாளை (25) காலை 9 மணி வரை குறித்த 16 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor