நாட்டின் சில பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நிலவும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை பகுதிக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேசத்திற்கு முதல் நிலை எச்சரிக்கையும், தொலுவ மற்றும் பஸ்பாகே கோரளைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor