அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொகை வியாழக்கிழமை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்கள் ஜூலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பலன்களைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor