கொழும்பில் மக்களை மிரட்டி பணம் திருடிய நபர் கைது!

கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பயணப் பொதி
மேலும் அதில் மூன்று வெவ்வேறு வகையான கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணப்பைகள், பெண்களின் கைப்பைகள், பயணப் பொதிகளில் இருந்த பணம் போன்ற பெறுமதியான பொருட்கள் அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமின்றி திருடப்பட்டுள்ளதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor