நாட்டில் சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாட்டால் சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்

வரி அதிகரிக்கப்பட்டமையால் அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரி உயர்வால், பல வியாபாரிகள் சர்க்கரை விலையை உயர்த்தியதால், அதை கட்டுப்படுத்த அதிகபட்ச சில்லறை விலையை அரசு விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாவாகவும், ஒரு கிலோ பிரவுன் சீனி 330 ரூபா என அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந் நிலையில், சந்தையில் சீனி கையிருப்பு விற்பனைக்கு வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிரமத்திற்குள்ளாகிய வாடிக்கையாளர்கள்
இதனால், சந்தைக்கு சீனி வாங்க வந்த வாடிக்கையாளர்களும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், சந்தையில் சீனி தட்டுப்பாடு மட்டுமின்றி சம்பா, கீரி சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சந்தைக்கு அரிசி வாங்க வந்த பல வாடிக்கையாளர்கள் அரிசி இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் சீனி மற்றும் அரிசி விற்பனை செய்பவர்களை கண்டறியும் சோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor