புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை (16) இரவு வெளியானது.

இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் மாணவர்களின் நிலை அறிவிக்கப்பட மாட்டாதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள்பரிசீலனை
மேலும் , நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை இணையவழியில் புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor