மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் ஜீ.எல் . பீரிஸ் கூறியுள்ள விடயம்!

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியருக்கு ஏப்ரல் மாதம் முதல் 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஓய்வூதியர்களும் 2500 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor