ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடம் 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor