இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் இருந்த கஞ்சா பறிமுதல்!

இந்தியா, ஆந்திரா மாநிலத்தின் தமிழ்நாடு கோடிக்கரையிலிருந்து இலங்கைக்கு சொகுசுக் கார்களில் கடத்த முற்பட்ட சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சாவுடன் 8 சந்தேக நபர்களை தமிழ்நாட்டு தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா மூடைகள், விசைப்படகில் இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகபட்டினம் தனிப்படை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கீழையூர் அருகில் பொலிஸார் வாகனங்களை சோதனை செய்தனர்.

இதன்போது, இரண்டு கார்களை சோதனை செய்ததில் 300 கிலோகிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து கடத்தப்பட்ட கஞ்சாவை வேளாங்கண்ணி பகுதிக்கு கொண்டு சென்று, கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றமை தெரியவந்துள்ளதாக, இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor