கிழக்கு மாகாணத்தில் 499 அதிபர் நியமனங்கள்

கிழக்கில் அதிபர் தரம் III நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (06-11-2023) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor