யாழ் விடுதி ஒன்றில் தென்னிலங்கையர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் (6) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor