யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் கொள்ளை!

யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கோப்பாய் – இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் (15-10-2023) அதிகாலை 3.00 மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை.

இந்த நிலையில் அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor