யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ். தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor