அனைத்து பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்!

அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் நாவலவில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

சம்பளப் பிரச்சினை மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதிக் குறைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor