சர்ச்சைக்குரிய கரிம இரசாயன உரங்கள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள சீனா

சீன உர நிறுவனமான சீவின் பயோடெக், சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது செய்யப்பட்ட கரிம உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உர இறக்குமதி தொடர்பாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு சீன நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்
சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவது அல்லது செலுத்தப்பட்ட தொகையை அனுமதிக்க இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்பட்டன.

இருப்பினும், இரண்டு கோரிக்கைகளுக்கும் அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. பதிலாக கரிம உரத்தை முதலில் மேற்கொண்ட கட்டளையின்படியே பெற வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பணம் மற்றும் உரம் இரண்டையும் இழக்கும் அபாயம்
எனவே பணம் மற்றும் உரம் இரண்டையும் இழக்கும் அபாயம் உள்ளது என்றும்,இலங்கையில் கரிம உரங்களுக்கான தரநிலைகள் இல்லை எனவும், எனவே கரிம உரத்திற்கு தேவையான தரங்களை தயாரிக்குமாறு இலங்கை தரநிலை நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS) நிர்ணயித்த தரங்களுக்கு இணையாக, தாம் கரிம உரங்களை வழங்க முடியாது என்று சீன நிறுவனம் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor