யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் நபர் ஒருவர் கைது!

இளவாலை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor