மர்ம நபர்களால் வீட்டிற்கு தீ வைப்பு!

கிளி நொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடொன்றின் மீது இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (05.10.2023) இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம்(04.) இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து குறித்த வீட்டின் மீது தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி அக்கரான் குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor