9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டைபுரிந்த முதியவர்

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டைபுரிந்த 83 வயதுடைய ஒருவரை நேற்று முன்தினம் புதன்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவரால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து முதியவரை புதன்கிழமை (04) மாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor