பல்கலை விண்ணப்ப அனுமதி தொடர்பில்

2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினத்துடன் (05-10-2023) நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor