ஒக்டோபர் 11 முதல் புலமைப்பரிசில் வகுப்புகளிற்கு தடை விதிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதல் பாகம் 11.15 முதல் 12.15 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor