மட்டக்களப்பில் தாயை தாக்கிய மகன் கைது!

மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவ தினமான நேற்று அந் நபர் குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெற்ற தாக்குதல்
இதன்போது அதனைத் தடுக்க முற்பட்ட தாயாரின் மீதும் அந்நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந் நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor