போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டை பொருளாதார ரீதியாக எவ்வாறு மீட்பது என்பது பற்றிய பகுப்பாய்வை முன்வைக்க அரசாங்கம் தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

” பொதுமக்களும், நாட்டு தொழிலாளர்களும் தங்கள் பெல்ட்டை இறுக்கிக் கொண்டாலும் எந்த பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை” என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

” ஊழல், மோசடி, வீண் விரயத்தை தடுக்கும் இலட்சியம் அரசுக்கு இல்லை. நிர்வாகத்தின் தரம் அன்று இருந்ததை விட இன்று மோசமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நவீன முடிவெடுப்பதற்குப் பதிலாக, நிலப்பிரபுத்துவ மற்றும் காலனித்துவ மனநிலையுடன் பழமைவாத முடிவெடுக்கும் நடைமுறைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது” என அரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றன.

ரூ.20000/- சம்பள உயர்வு பெறுதல்

தொழிற்சங்கங்களை ஒடுக்குவதை நிறுத்துங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டம், ஊடக ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை மீளப் பெறுதல்

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பில் வெட்டுவதை நிறுத்தல்

அத்தியாவசிய சேவைகளுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்தல் அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் மேலும் கூறுகையில்,

மருந்துகள், வினைப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகள் தொடர்பான உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கான கோரிக்கைகளும் இதில் அடங்கும்.

Recommended For You

About the Author: webeditor