திருமணத்திற்கு புறம்பான உறவால் நிகழ்ந்த சோகம்!

பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தியால் வெட்டி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவரே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
அத்தோடு படுகாயமடைந்த மூவரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தந்தை, தாய், மகள் காயமடைந்ததோடு சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் கத்தியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு புறம்பான உறவால் இச்சம்பவம் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor