அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற இருக்கும் கனடா வாழ் தமிழர்

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாடிவரும் இலங்கை தமிழ் சிறுமியான அசானியின் சொந்த ஊரான நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க கனேடிய நபரொருவர் முன்வந்துள்ளார்.

அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி புசல்லாவ, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என World Action Foundation னின் தலைவரும், கனடாவில் வாழும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

” மலையக குயில்” அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் Lanka Vision Action Foundation ஊடாக மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து காணொளி ஊடாக, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக தோட்ட ஆலயத்தை குறுகிய காலப்பகுதிக்குள் புனரமைத்துக்கொடுப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor