பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

எல்லவில் போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுவல மீரியகெலே பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவரை அங்கிருந்த ஏனைய பொலிஸார் கைது செய்துள்ளார்.

அந்த சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள், கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor