யாழில் பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நபர் ஒருவர் கைது!

யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கமரக் குற்றிகள் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளன.

கனகராயன்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி டிப்பர் வாகனத்தில் கருங்கல் கிரவலுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட 22 தேக்க மரக் குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியில் கடமையில் நின்றிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சந்தேகநபர் பொலிஸாருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட போதிலும் கைது நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

கைதான சந்தேகநபர் நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor