கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு பொலிசார் வலைவீச்சு!

கனடாவில் பெண் ஒருவர் வாசனை திரவியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 2,100 டாலர்கள் பெருமதியான வாசனை தீர்வு திரவியங்களை குறித்த பெண் களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லா சேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்தகம் ஒன்றிலிருந்து இவ்வாறு குறித்த பெண், வாசனை திரவியங்களை கடந்த 11 ஆம் திகதி களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்தகத்திற்குச் சென்ற குறித்த பெண் சில வாசனை திரவிய போத்தல்களை யாருக்கும் தெரியாமல் தனது கைப்பையில் போட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை இவ்வாறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அது குறித்து அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த பெண்ணின் புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor