பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, அம்பலாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய, அந்த பகுதிக்கு பொலிஸார் சிவில் உடையில் சென்றுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor