தென்னிலங்கை தொலைக்காட்சியில் பலரையும் நெகிழ வைத்த இலங்கை சிறுமி அசானி

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.]

கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த கனகராஜ் அசானி என்ற சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06-08-2023) இடம்பெற்ற சரிகமப நிழ்ச்சியில் பாடினார்.

அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரு வாரங்களுக்கு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கும் அனுமதி அளித்துள்ளனர்.

ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலையே அசானி இன்று பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டும் அவர் பாடவில்லை.

தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிழ்ச்சியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அசானி,

வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு வயது முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் கூறினார்.

தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.

அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.

Recommended For You

About the Author: webeditor