சில நபர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களைத் தாக்கி காயப்படுத்துதல், துப்பாக்கி சூடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591733, 0712 685151 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Recommended For You

About the Author: webeditor