புதிய ஆன்லைன் கடவுச் சீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் உள்ள 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் Tiran Alles தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒரு நாள் சேவைக்காக 5,294 பேரும், சாதாரண சேவைக்கு 24,285 பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் கொழும்புக்குச் செல்லாமல் சொந்த ஊரிலிருந்தே கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor