அடுத்த மாதம் அளவில் தாமரை கோபுரத்தை திறந்து வைக்க திட்டம்!

சீனாவின்ன் கடனுதவியில் கொழும்பில் மிக பிரமாணடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் என்பவ்ற்றினை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

Recommended For You

About the Author: webeditor