மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்

யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மைதான் என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மைதான் என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

குறித்த விடயம் சிறுவர் நன்னடத்தை உத்தியோத்தருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் குறித்த ஆசிரியரையும் மாணவியின் உறவினர்களையும் பொலிஸ் நிலையம் வரவழைத்தனர்.

ஆசிரியர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட நிலையில் பாடசாலையின் நலன் கருதி குறித்த சம்பவத்தை சமரசமாக பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொண்டனர்.

மாணவிக்கு காலில் தழும்புகள் ஏற்பட்டதை தவிர வேறு எந்த உடல் உளப் பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் குறித்த மாணவி தனது அன்றாட கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor