அத்திவார இடிபாடுகளில்  ஆயுதங்களும் தோட்டாக்களும்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி வீதியைச் சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மானிப்பாய் பொலிஸார் அங்கு சோதனையிட்டதில் அத்திவார இடிபாடுகளில் இருந்து ஒரு தொகை ஆயுதங்களும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN