விடுமுறையில் துருக்கி சென்ற பிரித்தானிய சிறுவன் உயிரிழப்பு!

துருக்கியில் விடுமுறைக்காக சென்ற 14 வயது பிரித்தானிய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அன்டலியாவுக்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர லிபர்ட்டி லாரா கடற்கரை ஹோட்டலில் தங்கியிருந்தபோது 14 வயது சிறுவன் தனது அத்தையுடன் நீந்தும்போது சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் குளத்திலிருந்து மயக்கமடைந்த நிலையில் தூக்கி வரப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு CPR கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில், துருக்கியில் இறந்த ஒரு பிரித்தானிய சிறுவனின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் துருக்கியின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள லிபர்ட்டி லாரா ஹோட்டலில் ஐந்து நீச்சல் குளங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor