நாட்டில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 65 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor